Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் வரலாறு /பேச்சிபாறை அணைகட்டியவர் / Humphrey Alexander Minchin history
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் இவர் ஐரோப்பிய பொறியாளர் ஆவார் இவர் 08.10.1868 ஆண்டு பிறந்தார். அவர் முதலில் சென்னை  பிரிட்டிஷ் மாகாணத்தில் ...
ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் இவர் ஐரோப்பிய பொறியாளர் ஆவார் இவர் 08.10.1868 ஆண்டு பிறந்தார். அவர் முதலில் சென்னை  பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றினார். பின்னர், திருவிதாங்கூர் அரசாட்சியில் பேச்சிபாறை அணை கட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டார். இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது. இது கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும்.
இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இந்த பேச்சிபாறை அணையின் உயரம் முதலில் 42 அடியாகதான் இருந்ததாம். . பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டி முடிக்கப்பட்டது இந்த அணையின் கொள்ளளவு 207.19 சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் (48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள்.
             அலெக்சாண்டர் மிஞ்சினின் நினைவுச் சின்னமும், கல்லறையும்
                                               Tomb of Humphrey Alexander Minchin
பேச்சிபாறை அணை கட்டுவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவு செய்த மிஞ்சின்  25-09-1913 ஆண்டு தனது 45 -ம் வயதில் காலமானார். இந்த அணையை  கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் நினைவுச் சின்னமும், கல்லறையும் இங்கு காணப்படுது.
இந்த அணை நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் இருக்குகிறது   இந்த அணைக்கு.  போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ் வசதிகள் இருக்கு.  பேச்சிபாறை போற வழிலாம் மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். இங்க இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு தகுந்த இடம்.

இந்த பேச்சிபாறை அணை, தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாக இருக்கு. மேட்டூர் அணைக்கு அடுத்தபடியான பெரிய அணை இதுவே ஆகும்.


Mr. J.W. Minchin and his son Humphrey Alexander Minchin lived in India in the last quarter of 1800 and early 1900s. Humphrey died in 1913 at the age of 45. He was an Engineer and worked first as a Municipal Engineer in the City of Madurai in the erstwile British Province of Madras in India. Later he moved to the princely state of Travancore as Irrigation Engineer to construct an irrigation dam, which survives even today. He was buried near the dam and his tomb is still there. Both his father J.W Minchin and Humphrey were freemasons of high repute. Humphrey was born in 1868, according our records. He founded a freemasons lodge in Trivandrum, Travancore in 1897 under the English Constitution, which is still going strong under the name Lodge Minchin

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top