Home
»
Nanjil Nadu
»
குமரி மாவட்டம்
»
சுற்றுலா
»
நாஞ்சில் நாடு - Nanjil Nadu
» பேச்சிப்பாறை அணை வரலாறு சுற்றுலா - கன்னியாகுமரி மாவட்டம் - pechiparai dam tourisim kanyakumari dist
இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில்
இருக்கிறது. இது கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது மேற்கு
தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும். நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்)
தொலைவில் இருக்குகிறது இந்த அணைக்கு. போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ்
வசதிகள் இருக்கு. பேச்சிபாறை போற வழிலாம்
மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். இங்க
இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க.
பேச்சிபாறையிலும் சிறிய பஸ் ஸ்டான்ட்
இருக்கு. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு
தகுந்த இடம்.
இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர்
மகாராஜா மூலம் திருநாள் காலத்தில்
ஐரோப்பிய பொறியாளர் திரு ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட
செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இந்த அணையின் உயரம்
முதலில் 42 அடியாகதான் இருந்ததாம். . பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டி
முடிக்கப்பட்டதாம்.
இந்த அணையை கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுச்
சின்னமும், கல்லறையும் இங்க காணப்படுது.
இவரது காலம் (பிறப்பு) 08.10.1868 -(இறப்பு) 25-09-1913 அவர் முதலில் சென்னை பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில்
நகராட்சி பொறியாளராக பணியாற்றினாராம். பின்னர், திருவிதாங்கூர்
அரசாட்சியில் அணைகட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டதாக கூறப்படுது. ஹம்ப்ரி
மிஞ்சின் தனது 45 வயதில் 1913 ல்
காலமானார்.
இந்த அணையின் கொள்ளளவு 207.19 சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள். இந்த பகுதியில்
காணப்படும் நீர்நிலைக்கு பின்புறம் இருக்கும் மலையில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்
படகுமூலம் தான் போக்குவரத்து செய்கின்றனர்.
இந்தமலையில் எல்லாவிதமான
காட்டுமிருகங்களும் இருக்குறதா சொல்றாங்க இங்க வாழும் மலைவாழ் மக்கள். இந்த இடம் முழுதும் பாரஸ்ட் துரையின்
கட்டுபாட்டில்இருக்கு. இந்த பரந்த நீர்நிலையால் கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும்
ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுது. சுமார் 50
ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றதாம்.
பேச்சியம்மன் கோவில்
இங்கு கரையில் பேச்சியம்மன் கோவில் உள்ளது
இந்தக் கோவில் கேரளபாணி கட்டிடகலை அமைப்பில்
இருக்கு. பூஜை செய்பவர்கள் கூட நம்பூதிரி வகையினர் போலதான் இருக்காங்க.
பசுமையான மரங்களுக்கு இடையில் கோவில் பார்க்க
ரொம்ப அழகா இருக்கு. பார்பதற்கு பரவசமூட்டும் அம்மனின் சிலை கருணை வடிவாக
அலங்காரத்துடன் இருந்தது. அம்மனை கும்பிட்டு அங்கே இருந்து கிளம்பலாம்.
About Author

Advertisement

Related Posts
- மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் புனித பயணம் - Blessed Devasahayam Pillai Church Arvalvaimozhi04 May 20150
இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றா...Read more »
- குமரித் தந்தை மார்ஷல் நேசமணி வரலாறு - marshal A. nesamony History27 Aug 20170
தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்த...Read more »
- ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் வரலாறு /பேச்சிபாறை அணைகட்டியவர் / Humphrey Alexander Minchin history28 Aug 20140
ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் இவர் ஐரோப்பிய பொறியாளர் ஆவார் இவர் 08.10.1868 ஆண்டு பிறந்தார். அவர்...Read more »
- பந்திப்பூர் தேசியப் பூங்கா - பந்திப்பூர் புலிகள் சரணாலயம்- Bandipur National Park - bandipur tiger reserve07 Jan 20210
பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.