Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கடல் காடுகள் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நதிகள் , ஓடைகள் போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள்தான். அவை தான் நீரின் ஆதாரம். ஆனால் ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன....

நதிகள், ஓடைகள் போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள்தான். அவை தான் நீரின் ஆதாரம். ஆனால் ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.
    முதல் வகையை அலையாத்தி காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல்நீருக்கு அருகிலேயே வளரும். இந்த தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்துக்கொள்ளும். நீர்மட்டம் அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும். கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்ளும். இதன் இலைகள் மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.


 சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பாற்றுகின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் கடற்கரை. கடந்த சில ஆண்டுகளாக பிச்சாவரத்தில் அலையத்திக் காடுகளில் அடர்த்தி அதிகரித்து வருகிறது.

      இரண்டாவது வகை காடுகள் கெல்ப் காடுகள் என்கிறார்கள். இவை கடலுக்கு அடியில் வளரும் பூஞ்சை வகை செடிகள். செடிகள் என்றால், ஏதோ நம்வீட்டில் வளர்க்கும் செடிகள் போன்று கிடையாது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் 20 முதல் 40 அடி உயரம் வரை வளர்ந்து மிரட்டும். உலகில் இருக்கும் மிக முக்கியமான காடுகளின் பட்டியலில் இந்த கெல்ப் காடுகளும் உண்டு.


கடலுக்கு அடியில் எந்த தப்பவெப்ப சூழலிலும் இவை வளரும். நீருக்கு அடியில் கிடைக்கும் வெளிச்சம், நீரில் கலந்திருக்கும் ஆக்சிஜன், பாறைகளில் இருக்கும் தாதுக்களை உட்கொண்டு இவை வளருகின்றன. மெல்லிய நாணல் போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது தான் இந்த கெல்ப் காட்டின் பலம்.

கெல்ப் காடுகள் குளிர், ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரில் ஏற்படுகின்றன மற்றும் கடல் சூழலில் மிக அழகான மற்றும் உயிரியல் ரீதியாக வாழ்விடங்கள் உள்ளன.அவைகள் ஆழமற்ற திறந்த கரையோர நீர் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன, மற்றும் பெரிய காடுகள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வட்டங்கள் இரண்டிலும் நீண்டு இருக்கிறது, 20 º C விட குறைவான வெப்பநிலை தடை செய்யப்படுகின்றன. ஒளிச்சேர்க்கை  சார்ந்திருக்கிறது ஆழமற்ற நீர் அவற்றை கட்டுப்படுத்துகிறது மற்றும் அவைகள் 15-40m விட அரிதாக மிகவும் ஆழமாக. கெல்ப் தாவர இனமே மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதங்கள் சில பொதுவான ஒரு திறனை கொண்டிருக்கின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் நீரோட்ட மாறுபாடு, சுனாமி போன்றவற்றின் வேகத்தை இவை தடுக்கின்றன. கிரகத்தில் ஒவ்வொரு இயற்கை அதிசயம் போல், கெல்ப் காடுகள் அச்சுறுத்தல் கீழ் பெரும்பாலும் உள்ளன. முக்கிய பிரச்சினைகள் "கடல் மாசுபாடு மற்றும் நீர் தரம், கடற் பாசிகள் அறுவடை மற்றும் மீன், நுண்ணுயிர், காலநிலை மாற்றம் இவற்றின் முக்கிய எதிரி, மனிதனால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் மாசுதான்

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top