Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! - after delivery women taken foods
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
விறுவிறுப்பான கர்ப்ப காலத்திற்கு பின் தாய்மையை ஆனந்தமாக எண்ணி மகிழும் இந்த தருணங்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மிகவும...

விறுவிறுப்பான கர்ப்ப காலத்திற்கு பின் தாய்மையை ஆனந்தமாக எண்ணி மகிழும் இந்த தருணங்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாக உள்ளது. சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை பிரசவமாக இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முக்கியமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் தையல் ஆறுவதற்கும் சீக்கிரம் குணமடைவதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள் அவர்களுக்கு வாயு தொல்லை, மலச்சிக்கல் மற்றும் எந்த வித செரிமாண கோளாறுகள் கொடுக்கமாலும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதற்கு உணவும் ஒரு வகையில் காரணமாகும். நாம் இந்த பகுதியில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின் என்ன உணவு உண்ணலாம் என்பதை குறித்துப் பார்ப்போம்.

முட்டை 
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள் சாப்பிட வேண்டிய மிக முக்கிய உணவு முட்டை. இதில் உள்ள புரதச் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை பிரசவத்திற்கு பின் உடலுக்கு மீண்டும் அதன் வலிமையை கொண்டு வர உதவுகின்றன. இந்த உணவை ஒதுக்கி விடாமல் உண்டு நாம் கடந்து வந்த கடினமான கர்ப்ப கால மாற்றங்களை சரி செய்யலாம்.

மீன் 
ஒரு வேளை நீங்கள் மீன் பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாகும். குழந்தை பெற்ற பின் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகளில் மீன் மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஓமேகா 3 உள்ள மீன்களை உண்பது சிறந்த பலன்களைத் தரும். இவை உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தருகின்றன.

பால் 
பாலில் உள்ள சுண்ணாம்பு அதாவது கால்சியம் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் உருவாவதற்கு சுண்ணாம்பு சத்து அதிகம் தேவைபடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரணடு டம்ளர் பால் அருந்துவது நல்லதாகும்.

தர்பூசணி 
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் உடல் நிலை மீண்டும் அதன் பழைய சக்தியையும் செயல்களையும் செய்வதறகு சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. இதனால் நமது செர்மானம் மற்றும் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் செயல்கள் பாதிக்கப்படுகின்றது. தர்பூசணி இதை சரிசெய்வதில் சிறந்த பழமாக உள்ளது. உண்பதற்கு எளிதாகவும் நிறைய நீர் சத்து நிரைந்ததாகவும் உள்ள இந்த பழம் செரிமானத்தை எளிதாக்க வல்லது.

தண்ணீர் 
உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஈரப்பதத்தை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலும் நான்றாக சுரக்கும்.

தயிர் 
கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ள தயிர் மிகவும் சிறந்த உணவாகும். இதை நாமக்கு விருப்பமான எந்த வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பிரசவ அறுவை சிகிச்சையை எதிர் கொண்டிருக்கும் மகளிருக்கு தயிர் மிக சிறந்த மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும். 

வால்நட் 
அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புரதச் சத்துகளும், போலிக் அமிலத்தின் உற்பத்தியும் மிகுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு பின் இதை சாப்பிடுவது உடலின் சக்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சை 
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இவை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எந்த வித தொற்று நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். தையலில் புண்கள் இருக்கும் போது எளிதாக அந்த இடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுவது நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கிறது.

பச்சை இலை மற்றும் காய்கறிகள் 
நார்ச்சத்து மிகுத்த உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கீரைகள், பச்சை காய்கறிகள் அகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும். இது நமது செரிமாணத்தை அதிகப்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகின்றன. இவைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவு வகைகளாகும்.

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top