Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பசியை விரட்ட மாத்திரை! – லண்டன் தயாரிப்பு
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுப...
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுபட்டு உழைப்பது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே. இதனை,‘‘பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?’’- என்ற பாவேந்தரின் பாடல்வரிகள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது. வயிறு என்ற ஒன்று இல்லையெனில் உலகில் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றாது. பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன. உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன.பசியைப் பற்றி பல்வேறு தகவல்கள் பழமொழிகளில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. பசியினால் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நமது முன்னோர்கள்

மொத்தத்தில் பசி வந்தால் பத்தும் பறந்து விடும்’ என்பது பழமொழி.ஆனால், இந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மாத்திரையில் உள்ள ‘அசிடேட்’ என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள நார்ச்சத்து செரிக்காமல் தடுக்கிறது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் மீதான நாட்டம் குறைகிறது.இந்த மாத்திரையின் தாக்கத்தினால் ரத்தம், பெருங்குடல் மற்றும் மூளைக்கு உணவு பொருட்கள் சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top