Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஆட்டுக்கால் சூப் குடிச்சா சளி இருமலுக்கு நல்லது..உடம்புக்கு, எலும்பு வலிமைக்கு ஏத்த சூப் இது.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
எல்லாருக்கும் சளி இருமல் வந்திடுச்சி... அடிக்கடி கிளைமேட் மாறிப்போனதால வந்த வினையா இருக்கலாம்.... ஆட்டுக்கால் சூப் குடிச்சா சளி இருமலு...

எல்லாருக்கும் சளி இருமல் வந்திடுச்சி... அடிக்கடி கிளைமேட் மாறிப்போனதால வந்த வினையா இருக்கலாம்....
ஆட்டுக்கால் சூப் குடிச்சா சளி இருமலுக்கு நல்லது..உடம்புக்கு, எலும்பு வலிமைக்கு ஏத்த சூப் இது.
செய்முறை சொல்லிடறேன்....

வேண்டிய பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
இஞ்சி பூண்டு நசுக்கியது - சிறிதளவு
மிளகு - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
மல்லி - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் - 1
மல்லித்தூள்- சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
பட்டை கிராம்பு சோம்பு - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை தூவ

காலை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் தனியா இவைகளைப் போடவும்
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்
கழுவிய ஆட்டுக்காலை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
மல்லித்தூள் மிளகாய், மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து விடவும்.
அடுப்பு சிம்மில் இருந்தால் போதும் ஒரு அரைமணி நேரம் நன்றாக கால் வேகும் வரை வைத்து இருக்கவும்.தண்ணீரும் சிறிதளவு குறைந்து விடும்.உப்பின் சுவை அதிகமானால் நீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.பின் மல்லித்தழை தூவிவிடவும்.
சுவையான சூப் ரெடி..

கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் மிளகுத்தூளையும் தூவி சாப்பிட்டால் கண்டிப்பாய் ஒரு வித விக்கல் வரும்.அதுதான் சூப்பின் சுவைக்கு கிடைத்த வெற்றி..

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top