Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..! - ஒளவையார்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பின்னத்தில் ( Fraction) பாடிய அவ்வை..! நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அ...

பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..!
நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்!
இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம் :-
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
இது தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடியது (வசை = திட்டுதல் )
இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.
அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ "
(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! )
ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 =
(கால் )1/4 =
எனவே இப்போது எட்டேகால் = அவ !!
இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?
இப்படி மிகவும் நுட்பமாக தன்னை இகழ்ந்தவனை வசை பாடுகிறார் அவ்வை!
அடுத்த வரிகளுக்கான பொருள் :-
----------------------------------------------------------
1. எமனேறும் பரியே - எருமைக்கடா
2. மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
3. முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே
4. குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே
5. கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.
" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.
இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும் !


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top