Home
»
18 சித்தர்கள்
»
சித்தர்கள் உலகம்
» பதஞ்சலி சித்தர் வரலாறு- பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி - patanjali siddhar history - patanjali siddhar jeeva samadhi
இன்று உலகெங்கும்
பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார்.
இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக
விளங்குகிறது.
இவர்
அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப்
பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும்
விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு
அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும்
ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை
தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல்
திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும்,
பதஞ்சலி முனிவர் ஏவிய
பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த
பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும்
சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து
ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண
சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த
குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும்
தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக
வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான்
18 -சித்தர்கள்,
ஒரு சீடன். உடல்
ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம்,
துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர்.
இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன்
ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம்,
பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது
சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.
பதஞ்சலி
முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு
இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப்
பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த
கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து
சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது.
அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க
உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள்
அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார்.
பதஞ்சலி சித்தரின் சிலை
குருவின் ரகசியத்தை
அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று
அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும்
என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு
நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம்.
தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார். படிப்படியாக கவுடபாதருக்கு
அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்
பதஞ்சலி முனிவர் யோக
சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது,
குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார்.
பதஞ்சலி முனிவர் இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி ஆலயத்தில் சமாதியடைந்ததாக
கூறப்படுகிறது.
பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி ஆலயம்
இராமேஸ்வரம் அதாவது உலகப்புகழ் பெற்றி இந்து மத ஆலயமான இராமேஸ்வரம்
இராமநாதஸ்வாமி ஆலயத்தில் அமைந்துள்ளது அதாவது 12 ஜோதிர்லிங்க
தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் வரலாறு அனைவரும் அறிந்ததே.
இந்த ஆலயத்திற்குள்தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் அதாவது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி
அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.
பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி ஆலயம்
பலர் அந்த ஆலயத்தை தரிசித்திருப்பார்கள் ஆனால் அனைவரும் இவரை தரிசிதிருப்பர்களா என்பது ஐயமே. அனைவரும் இவர் இருக்கும் இடத்தை கடந்து வந்திருப்பிர்கள்.இனிமேல் இராமேஸ்வரம் செல்பவர்கள் இவரையும் தரிசனம் செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை. அதே சந்நிதியில் 18 சித்தரிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடங்களை குறிப்பாக வைத்து பாடப்பெற்ற பாடல் இருக்கும்.
Subash
About Author

Advertisement

Related Posts
- கொங்கணர் சித்தர் வரலாறு - கொங்கணர் ஜீவசமாதி திருப்பதி- konganar siddhar history- konganar siddhar jeeva samadhi-Konganar Siddhar Temple22 Sep 20190
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் புளிஞர்...Read more »
- சித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi22 Sep 20190
கொங்கண சித்தர் ! தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்னும் பழமொழியும் பிறந்தது இதிலே...ஊதியூர் (பொன...Read more »
- கமலமுனி சித்தர் வரலாறு- திருவாரூர் கமலமுனி சித்தர் பீடம்- kamalamuni siddhar history- kamalamuni siddhar jeeva samadhi23 Sep 20190
சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூ...Read more »
- சிவனையும் நடுங்க வைத்த கருவூரார் சித்தர் வரலாறு| & ஜீவசமாதி - karuvurar siddhar jeeva samadhi26 Mar 20200
சிவனையும் நடுங்க வைத்த கருவூரார் சித்தர் வரலாறு| & ஜீவசமாதி - karuvurar siddhar jeeva ...Read more »
- நவநாயகர் சித்தர் போகர் வரலாறு ஜீவசமாதி பழனிமலை | Bogar, Boyang Wei china history thomb26 Mar 20200
போகர் (Bogar, Boyang Wei) பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், த...Read more »
- பாம்பாட்டி சித்தர் வரலாறு ஜீவ சமாதி பீடம் சங்கரன்கோவில் பாம்பாட்டி சித்தர் பீடம் மருதமலை | pambatti siddhar history in tamil26 Mar 20200
பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும்...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.