Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † ( ஃபெப்ரவரி 27 ) ✠ வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல் ✠(St. Gabriel of Our Lady of Sorrows)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
† இன்றைய புனிதர் † ( ஃபெப்ரவரி 27 ) ✠ வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல் ✠ (St. Gabriel of Our Lady of Sorrows) பிறப்பு : மார்ச் 1...
இன்றைய புனிதர் † ( ஃபெப்ரவரி 27 )
வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல் (St. Gabriel of Our Lady of Sorrows)
பிறப்பு : மார்ச் 1, 1838 அசிசி, திருத்தந்தையர் மாநிலம் (தற்போது இத்தாலி)
(Assisi, Papal States (Now Italy)
இறப்பு : ஃபெப்ரவரி 27, 1862 ( அகவை 23 ) இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு.
(Isola del Gran Sasso, Kingdom of Italy)
முக்திபேறு பட்டம் : மே 31, 1908 திருத்தந்தை பத்தாம் பயஸ்
புனிதர் பட்டம் : மே 13, 1920 திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
பாதுகாவலர் :
மத குருமார்கள், குருத்துவ மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இத்தாலியின் அப்ருஸ்ஸ்ஸி (Abruzzi)
நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 27 ம் தேதி
ஃபிரான்செஸ்கோ பொஸ்சென்ட்டி (Francesco Possenti) எனும் இயற்பெயர் கொண்ட 'வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்' ஒரு இத்தாலிய பாடுகளின் சபையின் (Passionist Clerical Student) குருத்துவ மாணவர் ஆவார். ஒரு தொழில்முறை குடும்பத்தில் பிறந்த இவர், இறைவனின் பாடுகளின் சபையில் சேர்வதற்காக தமது எதிர்கால இலட்சியங்களை விட்டுக்கொடுத்தவர். துறவு சபையின் வாழ்க்கை அசாதாரணமானதாக இல்லாவிடினும், துறவு சபையின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தார். வியாகுல அன்னையின்பால் இவர் கொண்ட பக்தியின் காரணமாக இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
ஃபிரான்சிஸ் மார்ச் 1, 1838ல் இத்தாலியின் அசிசி நகரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் "சான்டே" (Sante) ஆகும். அவர், உள்ளூர் அரசு அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர். இவருடைய தாயாரின் பெயர் "அக்னேஸ்" (Agnes) ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பதினோறாவது குழந்தை ஆவார். 1841ல் இவரது "ரோஸா" (Rosa) என்ற தங்கை மரணமடைந்தார். 1842ல், இவருக்கு நான்கு வயதாகையில், இவருடைய ஏழு வயதான "அடேல்" (Adele) என்ற சகோதரியையும், பின்னர் அதே வருடத்தில் தன்னுடைய தாயை இழந்தார். 

ஃபிரான்சிஸ் தமது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தமது சகாக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். தமது தொண்டு மற்றும் பக்தியால் புகழ் பெற்றவராயிருந்தார். கடின குணமுள்ள இவர், விரைவில் கோபமடையும் தன்மையுள்ளவராகவும் இருந்தார். தமது ஆரம்ப கல்வியை "கிறிஸ்தவ சகோதரர்களிடம்" (Christian Brothers) கற்ற இவர், பின்னர் இயேசு சபையினரின் (Jesuits) கல்லூரியில் (முக்கியமாக லத்தீன் மொழியில்) பயின்று வெற்றிகரமான மாணவர் என்று பெயரெடுத்தார்.
1851ல் ஒருமுறை தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ், நோயினின்றும் குணமடைந்தால் மத வாழ்வில் இணைவதாக உறுதிமொழி எடுத்தார். ஆனால், நோய் குணமானது எடுத்த உறுதிமொழி மறந்து போனது. அதேபோல், ஒருமுறை அவர் தமது நண்பர்களுடன் வேட்டையாட சென்றபோது, தவறுதலாகச் சுடப்பட்ட ஒரு துப்பாக்கி ரவையிலிருந்து மயிரிழையில் தப்பினார்.
1848ல், இவரது சகோதரர் "பால்" (Paul) மரணமடைந்தார். 1853ல் இவரது சகோதரர் "லாரன்ஸ்" (Lawrence) தற்கொலை செய்துகொண்டார். 1853ல் ஃபிரான்சிஸ் மீண்டும் நோயில் வீழ்ந்தார். இம்முறை அவருக்கு தொண்டையில் கட்டி வந்திருந்தது. இம்முறையும் அவர் நோய் குணமானால் மத வாழ்வில் இணைவதாக வேண்டிக்கொண்டார். நோய் குணமானது. இம்முறை அவர் நிஜமாகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அவர் இயேசு சபையில் சேர விண்ணப்பித்தார். ஆனால் ஏதோ காரணங்களுக்காக அது தாமதித்தது. தற்போது மீண்டுமொரு துயர சம்பவம் நடந்தது. அவரது தாயாரின் மரணத்தின் பின்னர் அவரை அன்புடன் கவனித்து வந்த அவரது தமக்கையார் "மேரி லூயிஸா" (Mary Louisa) காலரா நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
"ஸ்போலேடோ" (Spoleto) நகரை பாதித்த காலரா நோயின் தாக்கத்தின் பின்னர், நகரின் மத குருமார்களும் குடிமை அதிகாரிகளும் இணைந்து அன்னை மரியாளின் பண்டைய சொரூபங்களின் ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். ஃபிரான்சிஸும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அன்னை மரியாளின் ஒரு சொரூபம் இவரைத் தாண்டிச் செல்கையில், "நீ இன்னும் ஏன் இவ்வுலகில் இருக்கிறாய்" என்று ஒரு குரல் இவருக்குள்ளேயே கேட்டதாக உணர்ந்தார். இச்சம்பவம் இவர் துறவற வாழ்வில் இணைய தீவிரமாக தூண்டிய முதல் சம்பவமாகும். அவர் "பாடுகளின் சபையில்" இணைய ஒரு மத குருவின் ஆலோசனைகளை வேண்டினார். ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் கொண்ட தனிப்பட்ட பக்தியே இவரை "பாடுகளின் சபையில்" இணைய தூண்டியது.
ஃபிரான்சிஸின் தந்தையார் இவரை துறவறம் செல்ல அனுமதிக்க மறுத்தார். தமது பல்வேறு உறவினர்கள் மூலம் இவரது மனதை மாற்ற முயற்சிகள் பல செய்தார். ஆனால், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஃபிரான்சிஸின் நோக்கங்கள் உணமையானவை என்றும் வெறும் சலனங்களல்ல என்றும் புரிந்து கொண்டார்.
"மொர்ரோவெல்" (Morrovalle) என்ற இடத்திலுள்ள "பாடுகளின் சபையின்" துறவறப்புகுநிலையில் இணைவதற்காக ஃபிரான்சிஸ் தமது சகோதரரும் "டொமினிக்கன் துறவியுமான" (Dominican Friar) "அலோஸியஸுடன்" (Aloysius) புறப்பட்டார். செப்டம்பர் 19, 1856ல் அவர்கள் அங்கே சென்று சேர்ந்தனர். இரண்டு தினங்களின் பின்னர் அவர் பாடுகளின் சபையினரின் ஆடைகளைப் பெற்றுக்கொண்டார். 'வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்' என்ற பெயரை தமது மதப் பெயராக ஏற்றுக்கொண்டார். ஒரு வருடத்தின் பின்னர் அவர் "பாடுகளின் சபையின்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இவர் "பாடுகளின் சபையின்" தமது மாணவப் பருவத்தில் தாம் ஒரு வெற்றிகரமான மாணவர் என்பதை நிரூபித்தார். துறவற வாழ்வில் இன்னல்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றார். பணியில் முன்மாதிரியாக விளங்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். குழப்பகாலங்களிலும் போராட்ட சூழல்களிலும் கடவுளின் அன்பு மற்றும் பிறரன்பு எல்லாவித வேறுபாடுகளையும் களைந்துவிடும் என நிருபித்தார். கடுமையான துறவற வாழ்வில் பாதிப்படைந்தார். விரைவிலேயே இவர் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டார்.
சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்து வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி "ஓ என் அன்னையே துரிதமாக வாரும்" என்று சொல்லியபடியே, ஃபெப்ரவரி 27,1862ம் நாள் தன்னுடைய கனவாகிய குருத்துவத்தை அடைய முடியாமல் உயிர்விட்டார். 

இவர் மாணவராக "பாடுகளின் சபையில்" பயிற்சியில் இருந்த காலத்தில் துறவு சபையின் தலைவராக இருந்த "அருட்தந்தை 'தூய மரியாளின் நார்பெர்ட்" (Father Norbert of Holy Mary) கூறுகையில், "மரண தருவாயில், அன்னை மரியாளை கபிரியேல் நேரில் கண்டார்" என்றார்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top