அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.
சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது!. இது குறித்து விஜய் தொலைக்காட்சியில் கூட ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து ஒடிந்த நிலையில் பரிதாமாக கிடக்க, எஞ்சியுள்ள ஒரு குதிரையின் படம் தான் இது. இதை பார்க்க வரும் மக்கள் அனைவரும் ஒலி எழுப்ப இதை கல்லை கொண்டு அடிப்பதால் குதிரை பாழாகின்றது என்று தற்போது வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.