Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) இலக்கியங்கள் / வைணவ இலக்கியங்கள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ( Naalaayira Divya Prabandham) நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப...

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham)
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.

திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.

இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,

முதலாயிரம்-----------947 பாடல்கள்
பெரிய திருமொழி----1134 பாடல்கள்
திருவாய்மொழி------1102 பாடல்கள்
இயற்பா---------------817 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலனாதிபிரான்
கண்ணிநுண்சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
திருஎழுகூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகர ஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி (13-473)
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை (474-503)
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (647-751)
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் (752-871)
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை (872-916)
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி (917-926)
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் (927-936)
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு (937-947)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (948-2031)
முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
பதினோராம் பத்து
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம் (2032-2051)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் (2052-2081)
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி (2082-2181)
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182-2281)
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381)
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382-2477)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் (2478-2577)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம் (2578-2584)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585-2671)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2712)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (2791-3892)
முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி (3893-4000)


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top